How to make instant murukku | மாவு அரைத்து கஷ்டப்படாமல் பத்தே நிமிஷத்தில் மொறு மொறுப்பான முறுக்கு எப்படி செய்யலாம் என்று தெரியுமா?
How to make instant murukku | மாவு அரைத்து கஷ்டப்படாமல் பத்தே நிமிஷத்தில் மொறு மொறுப்பான முறுக்கு எப்படி செய்யலாம் என்று தெரியுமா?
Published on: October 25, 2024 at 12:14 pm
How to make instant murukku | தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வீட்டில் செய்யக்கூடிய பலகார வகைகளில் ஒன்று முறுக்கு. முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை நனைய வைப்பது, அரைப்பது போன்ற பெரிய செய்முறை இருக்கும். ஆனால் அரிசியை ஊற வைக்காமல் உடனடியாக செய்யக்கூடிய முறுக்கு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை மாவு -1 கப்
அரிசி மாவு -3 கப்
உப்பு -1 டீஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
எள்ளு – 2 டேபிள் ஸ்பூன் (எள்ளுக்கு பதிலாக ஓமம் பயன்படுத்தலாம் )
வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன் (வெண்ணெய்க்கு பதிலாக 1 டேபிள் ஸ்பூன் நெய் பயன்படுத்தலாம் )
செய்முறை
பொட்டுக்கடலையை நன்கு அரைத்து பொடி ஆக்கி ஒரு சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாங்கிய பொட்டுக்கடலை மாவாக இருந்தாலும் சலித்து எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு கப் பொட்டுக்கடலை மாவுக்கு மூணு கப் அரிசி மாவு எடுத்துக்கொள்ள வேண்டும். கடையில் வாங்கிய இடியாப்ப மாவு அல்லது பச்சரிசி மாவும் பயன்படுத்தலாம்.
இந்த மாவையும் சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், எள்ளு, வெண்ணை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் நன்கு சூடான தண்ணீர் சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி கிளறி விட வேண்டும். சூடான தண்ணீரை சிறிது சிறிதாக மாவினில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
அதிக தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. புட்டு மாவு பதத்தில் வரும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து எடுக்கவும். மாவினை பாத்திரத்துடன் நன்கு அழுத்தி வைத்து இதனை 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்னர் இதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் வரும்வரை நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். முறுக்கு மாவினை தயார் செய்த பின் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.
முறுக்கு சுடும் இடைவெளியில் முறுக்கு மாவு மூடி இருப்பதை கவனித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மாவிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து மூணு கண் இருக்கும் முறுக்கு அச்சியில் நிரப்பி ஒரு தட்டின் மீது முறுக்கு பிழிய வேண்டும். பின்னர் அதை கவனமாக எடுத்து சூடான எண்ணெயில் சேர்த்து பொறிக்க வேண்டும். புதிதாக செய்பவர்கள் கரண்டியின் பின்புறம் முறுக்கை பிழிந்து எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கலாம். இப்போது சுவையான மொறு மொறு முறுக்கு தயார்.
இதையும் படிங்க : தேங்காய் எண்ணெய் வாசம் தூக்கும்: கேரள ஸ்டைலில் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com