செம்ம டேஸ்டா சென்னா மசாலா.. இப்படி செஞ்சு அசத்துங்க !

சுவையான சென்னா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Published on: December 11, 2024 at 12:25 pm

Food | சப்பாத்தியோடு சேர்த்து சாப்பிடக்கூடிய சுவையான சென்னா மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

தேங்காய் எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
பிரிஞ்சி இலை-2
கல்பாசி -1
பெரிய வெங்காயம்-1
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2கப்
மிளகாய் தூள் -1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் -2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
கரம் மசாலா -1 டீஸ்பூன்
வேக வைத்த கொண்டகடலை -1கப்

அரைக்க வேண்டியவை

தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் -5
முந்திரி பருப்பு -5
துருவிய தேங்காய்-½ கப்
சீரகம் -1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
கிராம்பு -3
பட்டை -1
பச்சை மிளகாய் -1
கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி அளவு
வேக வைத்த

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம் முந்திரி பருப்பு துருவிய தேங்காய் சேர்த்து பார்க்கவும். இதனுடன் சீரகம் சோம்பு, பட்டை கிராம்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் ஒரு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து வதக்கவும். இவை ஆரியப் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பிரிஞ்சி இலை, கல்பாசி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும். இதனுடன் ரெண்டு கப் தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் அடுப்பு தீயை லோ ஃபிளேமில் வைத்து மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

வெள்ளை கொண்டகடலையை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த கொண்டகடலையை மசாலாவுடன் சேர்த்து கிளறி விடவும். பின்னர் இதனுடன் ஏற்கனவே தயார் செய்து வைத்த விழுதினை சேர்த்து கலந்து விடவும். கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை மோடி ஹை பிளேவில் இரண்டு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் ஆவி முழுவதுமாக வெளியேறிய பின்னர் திறக்கவும். இப்போது சுவையான சென்னா மசாலா தயார். இறுதியாக இதன் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.

இதையும் படிங்க சட்டுனு செய்யக்கூடிய மோர்க்குழம்பு; இப்படி ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com