Bank of Baroda Recruitment 2025: பேங்க் ஆஃப் பரோடாவில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்ப்போம்.
Bank of Baroda Recruitment 2025: பேங்க் ஆஃப் பரோடாவில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்ப்போம்.
Published on: March 26, 2025 at 10:18 pm
Updated on: March 26, 2025 at 10:19 pm
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், 146 சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bankofbaroda.in வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான பதிவு செயல்முறை இன்று (மார்ச் 26 2025) தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 15, 2025 ஆகும். இது குறித்து வெளியான அறிவிப்பில், ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு துறை பதவிக்கு எந்தவொரு வேட்பாளரும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலி பணியிடங்கள்
சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் 101
வங்கி பாதுகாப்பு துணை ஆலோசகர் 01
ரேடியன்ஸ் பிரைவேட் 03
குழு தலைமை 04
பிராந்தியத் தலைவர்: 17 பதவிகள்
செல்வ மூலோபாய நிபுணர் (முதலீடு & காப்பீடு): 18 பதவிகள்
தயாரிப்புத் தலைவர் – தனியார் வங்கி: 1 பதவி
போர்ட்ஃபோலியோ ஆராய்ச்சி ஆய்வாளர்: 1 பதவி
வயது மற்றும் கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் உள்ள விரிவான அறிவிப்பில் கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்புகளை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்ப கட்டணம்
பொது, ஒபிசி, இ.டபிள்யூ.எஸ் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியல், பழங்குடி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு, கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் கட்டண நுழைவாயில் கட்டணங்கள் அனைவருக்கும் பொருந்தும்.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?
தேர்வு நடைமுறையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து தனிப்பட்ட நேர்காணல் நடத்தப்படும். இதையடுத்து, நேர்காணல் மற்றும் தேர்வு செயல்முறைக்கான தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பி.எம். இன்டன்ஷிப் ஸ்கீம் 2025: 10, 12ஆம் வகுப்பு பாஸ் மாணவர்கள் நோட் பண்ணுங்க..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com