Padma Bhushan Ajith Kumar: கார் ரேஸில் வென்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ள நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Padma Bhushan Ajith Kumar: கார் ரேஸில் வென்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ள நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Published on: February 2, 2025 at 12:39 pm
நடிகர் அஜித்குமாரின் கலைத்துறை மற்றும் பல்வேறு சாதனைகளை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கும் யோகி பாபு இது குறித்து பேசுகையில், ” எவ்வளவு பெரிய சாதனை; அஜித் குமார் சாருக்கு பாராட்டு விழா எடுக்க வேண்டும். அவரை அனைவரும் பாராட்ட வேண்டும்” என்றார்.
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக தற்போது வலம் வந்து வருகிறார். இவர், ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய் என முதன்மை நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இது மட்டுமின்றி பாலிவுட் முதன்மை நட்சத்திரம் ஷாருக்கான் உடனும், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ்சுடனும் ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு மட்டுமில்லாமல், சில சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் மண்டேலா படம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் யோகி பாபு சவரத் தொழிலாளியாக நடித்திருப்பார். இதே போல் குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ன சில படங்களிலும் இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ”புஷ்பா 2” ஓடிடி வெளியீடு அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com