vani bhojan: ‘தாம் எதையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது; மனதில் பட்டதை அப்படியே பேசி மாட்டிக் கொள்கிறேன்” என்கிறார் நடிகை வாணி போஜன்.
vani bhojan: ‘தாம் எதையும் பிரித்துப் பார்ப்பது கிடையாது; மனதில் பட்டதை அப்படியே பேசி மாட்டிக் கொள்கிறேன்” என்கிறார் நடிகை வாணி போஜன்.
Published on: May 9, 2025 at 6:04 pm
சென்னை, மே 9 2025: நடிகை வாணி போஜன் அண்மையில் அளித்த பேட்டியில் தாம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது, ” என்னிடம் மனம் திறந்து பேசுங்கள் என சொல்கிறார்கள்; பொதுவாகவே நான் அப்படித்தான்.
என் மனதில் பட்டதை பட்டென பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறேன். எனது இந்த பழக்கத்தை மாற்ற நான் முயற்சிகள் செய்து வருகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை என நான் பேதம் பார்ப்பதில்லை எனக் கூறிய நடிகை வாணி போஜன், ” எனது கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவம் கொடுப்பதில் தான் எனது கவனம் இருக்கும்; மாறாக நான் சின்னத்திரை பெரிய திரை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டேன் என்றார்.
சட்னி சாம்பார்
இதற்கிடையில் நடிகை வாணி போஜன் தனக்கு சட்னி சாம்பார் என்ற வெப் தொடருக்கு சிறந்த பாராட்டுக்கள் கிடைத்தன; அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது என்றார். தொடர்ந்து தான் நல்ல கதாபாத்திரங்களை ஒருபோதும் மிஸ் செய்ய மாட்டேன் என்றும் நடிகை வாணி போஜன் கூறினார்.
இதையும் படிங்க நான்தான் ஷாருக்.. வெளிநாட்டு மீடியாக்களிடம் அறிமுகமான ஷாருக்கான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com