பணிக்கு செல்லும் தாய்மார்கள்.. இந்த வசதி ஏன் இல்லை? குரல் கொடுத்த கங்கனா ரணாவத்!

Kangana Raises Childcare Concern : “பணிக்கு செல்லும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளை அவர்களுடன் அழைத்துச் செல்லும் வசதிகள் ஏன் இல்லை” என நடிகை கங்கனா ரணாவத் கேள்வியெழுப்பினார்.

Published on: June 3, 2026 at 3:32 pm

Updated on: June 3, 2026 at 3:34 pm

புதுடெல்லி, ஜூன் 2, 2026: பாலிவுட் நடிகையும், பா.ஜ.க. மக்களவை எம்.பி.யுமான கங்கனா ரணாவத், பணியிடங்களில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்பதை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தனது இணை நடிகை ஸ்மிதா தாம்பே தனது மகளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டு வந்த அனுபவத்தை எடுத்துக்காட்டி, ஏன் குழந்தைகளுக்கான தனி அறைகள் இல்லையென அவர் வலியுறுத்தினார்.

“பாரத் பாக்ய விதாதா” படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கங்கனா, பெண்கள் குடும்பம் மற்றும் தொழில் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகிறது என்று கூறினார்.

அதில், அரசு வேலைகளில் 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டாலும், அதன் பின் குழந்தைகளை வேலைக்கு அழைத்துச் செல்லும் வசதி இல்லை என்றும், குழந்தைகளுக்கான விளையாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், பெண்கள் பணியிடங்களில் அதிக ஆதரவு பெற வேண்டும், இல்லையெனில் அவர்கள் குடும்பம் மற்றும் தொழில் இடையே சிக்கலில் சிக்க வேண்டியிருக்கும் எனவும் கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : என் வாழ்க்கையில் மூக்கை.. திரிஷா திடீர் பதிலடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com