ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு: சமரச மையத்தில் ஒரு மணி நேரம் பேச்சு!

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச மையத்தில் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

Published on: November 27, 2024 at 10:41 pm

Jayam Ravi-Aarthi divorce case | நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்திருந்தார்.

ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அறிவிப்பு, பலத்த சலசலப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுகிறது. இவர்களின் திருமண பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக ஜெயம் ரவிக்கு மரியாதை அளிக்கவில்லை; இதுவே விவாகரத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி தொடர்பான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்னதாக நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொளி வாயிலாக ஆஜரானார். எந்த நிலையில் இருவரும் என்ற சமரச மையத்தில் ஆஜரானார்கள். சுமார் ஒரு மணி நேரம், நடந்த இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையும் படிங்க 2 ஆண்டுகளாக ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை; ஆனாலும் ஸ்டார் பட்டியலில் அஜித்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com