Akshay Kumar : காமெடிப் படங்களில் நடிப்பது தனக்கு சவாலாக இருந்ததாக அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
Akshay Kumar : காமெடிப் படங்களில் நடிப்பது தனக்கு சவாலாக இருந்ததாக அக்ஷய் குமார் கூறியுள்ளார்.

Published on: June 24, 2026 at 4:11 pm
புதுடெல்லி, ஜூன் 24, 2026: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்ததால், “என்னால் எதையும் செய்ய முடியம்” என்ற எண்ணம் அவருக்குள் உருவானதாக கூறியுள்ளார். இதனால், தன்னைத் தானே அறைந்துகொள்ள வேண்டும் போல உணர்ந்ததாக அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
2000-களின் முற்பகுதியில், வெல்கம், ஹேரா ஃபெரி, மற்றும் பூல் புலையா போன்ற படங்கள் மூலம் அக்ஷய் குமார் நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.
இந்தப் படங்கள், அவரின் நடிப்பு திறனை வேறு கோணத்தில் வெளிப்படுத்தியதோடு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அக்ஷய் குமார், “நான் பேசாமல் இருந்தால் கேலி செய்வார்கள்; பேசினால் பிரச்சினை தான்” என்ற நிலையை சந்தித்ததாகவும், ஆனால் தனது திறமையை நிரூபிக்க நகைச்சுவை படங்களில் நடிப்பது ஒரு சவாலாக இருந்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க : “நான் பேசினாலே பிராபளம்தான்”.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com