₹15.15 லட்சம் கோடி.. ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிதி முறைகேடு.. எல்.ஐ.சி பங்குகள் வீழ்ச்சி ஏன்?

SEBI probe Rajesh Exports : ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மீது பெரிய அளவிலான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை செபி முன்வைத்துள்ளது.

Published on: June 5, 2026 at 12:26 pm

Updated on: June 5, 2026 at 12:28 pm

மும்பை, ஜுன் 5, 2026: இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (SEBI) நிறுவனம் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மீது பெரிய அளவிலான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக செபியின் இடைக்கால உத்தரவில் , 2021 முதல் 2025 வரையிலான காலத்தில், சுமார் ₹15.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய் தவறாக காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இதனால், எல்.ஐ.சி நிறுவனம் வைத்திருக்கும் 10.8% பங்கு கவனத்திற்கு வந்துள்ளது.

என்ன புகார்?

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு துணை நிறுவனங்கள், குறிப்பாக வால்காம்பி எஸ்.ஏ (Valcambi SA) வழியாக வருவாய் அதிகரித்து காட்டப்பட்டதாக செபி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், நிறுவன நிதிகள் ப்ரொமோட்டர்களுடன் தொடர்புடைய கணக்குகள் வழியாக மாற்றப்பட்டதாகவும், தவறான கணக்கியல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்தவுடன், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5% சரிவடைந்து, சந்தையில் வாங்குபவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், லைப் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) பங்குகளும் சுமார் 1% வீழ்ச்சி கண்டன. இதனால், எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீட்டு கண்காணிப்பு முறைகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில், செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ப்ரொமோட்டர் ராஜேஷ் மேத்தாவை பங்குச் சந்தை வர்த்தகத்திலிருந்து தடை செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதி நிலை குறித்து விரிவான ஃபோரன்சிக் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் நிதி பாதுகாப்பு தொடர்பாக எல்.ஐ.சி மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : ரூபாய் மதிப்பு தொடர் சரிவு.. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com