பி.பி.எஃப் திட்டத்தில் இப்படி ஓர் வாய்ப்பா? மாதம் ரூ.1.20 லட்சம் வட்டி இல்லா வருவாய்!

PPF Investment: பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதத்திற்கு ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறுவது எப்படி என்பது தெரியுமா? இது குறித்து பார்க்கலாம்.

Published on: February 11, 2025 at 1:53 pm

பி.பி.எஃப் திட்டத்தில், இந்திய குடிமகன்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் கால அவகாசம் உள்ளது. இந்தத் திட்டத்தில், முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை மற்றும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. மேலும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது மத்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓர் சேமிப்புத் திட்டம் ஆகும். இது ஒரு நிதியாண்டுக்கு ரூ.1,50,000 வரையிலான முதலீடுகளுக்கு வரி இல்லாத வருமானத்தை வழங்குகிறது.

பொதுவாக, பி.பி.எஃப் திட்டம் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி இன் கீழ் வருமான வரிச் சலுகையை பெற அனுமதிக்கிறது. அந்த வகையில், இந்தப் பி.பி.எஃப் திட்டத்தில் இருந்து மாதத்திற்கு ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு ஈட்ட முடியும் என்பதை பார்க்கலாம்.

வரி விலக்கு

பி.பி.எஃப் முதலீட்டு திட்டம், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி இன் கீழ் உத்தரவாதமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகிறது.

குறைந்தப்பட்ச முதலீடு

பி.பி.எஃப் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.500 ஆகும். அதேநேரத்தில், அதிகபட்ச முதலீடு ரூ.1.5 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.20 லட்சம் வருவாய் பெறுவது எப்படி?

பி.பி.எஃப் திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீட்டைத் தொடங்கி, 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை அதைத் தொடர வேண்டும். இதில், அதிகபட்ச வட்டியைப் பெற, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1-5 க்கு இடையில் முதலீடு செய்ய வேண்டும்.

அந்த வகையில், 15 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.22,50,000 ஆக காணப்படும். மேலும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.18,18,209 ஆக வளர்ந்திருக்கும்.
தொடர்ந்து, மதிப்பிடப்பட்ட முதிர்வு ரூ.40,68,209 ஆக காணப்படும். இதையடுத்து, முதலீட்டாளர் திட்டத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

20 ஆண்டுகள் முதலீடு

மேலும், முன்பு போலவே வருடத்திற்கு ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம். இதைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.66,58,288 ஆகவும் இருக்கும்.

இதையடுத்து, முதலீட்டாளர் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு எடுத்துக்கொண்டு, வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம். இதனால், 25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 ஆகவும் இருக்கும்.

30 ஆண்டுகால முதலீடு

திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 30 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.45,00,000 ஆக இருக்கும். மேலும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,09,50,911 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,54,50,911 ஆகவும் காணப்படும்.

இவ்வாறு திட்டத்தை 34 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். இதன்மூலம், மொத்த முதலீடு ரூ.51,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,59,43,144 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.2,10,43,144 ஆகவும் உயர்ந்திருக்கும். இதையடுத்து நீங்கள் மாதம் ரூ.1,24,505 வீதம் வட்டி வருமானம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ரூ.1,000 முதல் முதலீடு: எஸ்.பி.ஐ சூப்பர் சிட்டிசன் ஸ்பெஷல் எஃப்.டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com