Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

Published on: October 26, 2024 at 10:21 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ.7,295 ஆகவும், பவுன் ரூ. 58,360 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 65 உயர்ந்து கிராம் ரூ. 7,360 ஆகவும் பவுன் ரூ. 58,880 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,865 ஆகவும் பவுன் ரூ. 62,920ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை கிராம் ரூ.107 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.107,000 ஆகவும் நேற்றைய விலையிலேயே காணப்படுகின்றது.
இதையும் படிங்க
புதுடெல்லி, ஜன.14, 2026: சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) பிரதிநிதிகள், செவ்வாய்க்கிழமை, புதுடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் (RSS) மூத்த நிர்வாகிகளை சந்தித்தனர். இதற்கு முன், அவர்கள் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர்களுடன் கட்சித் தலைமையகத்தில் திங்களன்று கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கருத்து
இந்தச் சந்திப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை துணை அமைச்சர் தலைமையில் வந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள சீன தூதர் Xu Feihong உட்பட RSS-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்தனர்.
“ஆர்.எஸ்.எஸ் எப்போதும் அனைத்து சிந்தனைகளும், மதங்களும் சேர்ந்தவர்களை சந்திக்கத் தயாராக உள்ளது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்த்ரேய ஹோசபாலே அவர்களை சந்தித்தனர்.
இது ஒரு அன்பு சந்திப்பு மட்டுமே” என்றார். எனினும், சந்திப்பில் நடந்த உரையாடல்களைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் விமர்சனம்
காங்கிரஸ், இந்த சந்திப்பின் நேரம் மற்றும் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியது. “சந்திப்பில் பிரச்சினை இல்லை. உரையாடலிலும் பிரச்சினை இல்லை. பிரச்சினை BJP-யின் இரட்டை முகம், போலித்தனம், ஏமாற்றம் மற்றும் வஞ்சகத்தில் உள்ளது,” என காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறினார்.
இதையும் படிங்க: செம்புக் குடத்தில் தங்கம்.. மதிப்பு இத்தனை லட்சமா? இன்ப அதிர்ச்சியில் குடும்பம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
ஹைதராபாத், ஜன.14, 2026: பிரபல நடிகர் பிரபாஸ் நடித்துள்ள, “தி ராஜா சாப்” திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மீள முடியாத வீழ்ச்சி நிலைக்கு சென்றுவிட்டது. கடந்த திங்கட்கிழமை (Day 4), இந்தியாவில் படம் வெறும் ₹6.60 கோடி நெட் வசூல் மட்டுமே செய்தது. இது முதல் நாளுடன் ஒப்பிடும்போது 88% குறைவான வசூல் ஆகும்.
வசூல் நிலவரம்
டைரக்டர் மாருதி இயக்கியுள்ள தி ராஜா சாப் படத்தில், பிரபாஸ், சஞ்சய் தத், மாலவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி, சரீனா வாஹாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வெளியானதும் விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்ததால், தி ராஜா சாப் பாக்ஸ் ஆபீஸில் வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடல் பருமன் போராட்டம்.. அமீர் கான் மகளுக்கு இப்படி ஓர் பிரச்னையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜன.14, 2026: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி மற்றும் பி.பி.எஃப் ஆகிய இரண்டும் நீண்டகால முதலீட்டு திட்டங்கள். ஆனால் அவை சில முக்கிய அம்சங்களில் வேறுபடுகின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி
பி.பி.எஃப் முதலீடு
ரூ.1.5 லட்சம் முதலீடு
தபோது ₹1,50,000 வருடத்திற்கு SIP (12% வருமானம்) மற்றும் PPF (7.1% வட்டி) ஆகியவற்றில் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தமிழில் கணக்கிட்டு பார்ப்போம்.
SIP கணக்கீடு
பி.பி.எஃப்
பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி ஒப்பீடு
மியூச்சுவல் ஃண்ட் எஸ்.எஸ்.பி திட்டத்தில் 5 ஆண்டுகளில் 12 சதவீத வளர்ச்சி இருந்தால் ரூ.6.19 கோடி வருவாய் பெறலாம். அதுவே பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் ரூ.34.5 லட்சம் உறுதியான வருமானம் பெறலாம்.
Note: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான ஆவணங்களை கவனமாக படிக்கவும்.
இதையும் படிங்க: ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.11 லட்சம் ரிட்டன்.. இந்தப் ஃபண்ட் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
மும்பை, ஜன.14, 2026: தமிழில் நடிகர் சூர்யா உடன் படம் ஒன்றில் நடித்தவர் திஷா பதானி. இவர், பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திஷா படானி, பஞ்சாபி பாடகர் தல்விந்தருடன் காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில், திஷா படானி, உதய்ப்பூரில் நடைபெற்ற கிரிதி சனோனின் சகோதரி நுபூர் சனோன் – பாடகர் ஸ்டெபின் பென் திருமண விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், திஷா மற்றும் தல்விந்தர் கைகோர்த்து, மௌனி ராய் கணவர் சுரஜ் நம்பியாருடன் உரையாடும் காட்சி பெரும் கவனம் பெற்றுள்ளது.
பின்னர், உதய்ப்பூர் விமான நிலையத்தில், இருவரும் ஒன்றாக மும்பைக்கு புறப்பட்ட காட்சியும் பதிவாகியுள்ளது. முகத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக பிரபலமான தல்விந்தர், அப்போது முகக்கவசம் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடல் பருமன் போராட்டம்.. அமீர் கான் மகளுக்கு இப்படி ஓர் பிரச்னையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
தெஹ்ரான், ஜன.14, 2026: ஈரானில் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ எட்டியுள்ளதாக ஒரு ஈரான் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல நாட்களுக்குப் பிறகு, சில ஈரானியர்கள் வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்ய முடிந்தது. அப்போது, “கடுமையான பாதுகாப்பு படையணி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம், எதிர்காலம் குறித்து பெரும் குழப்பம்” என அவர்கள் விவரித்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமைதியான போராட்டக்காரர்களை பாதுகாக்க இராணுவத்தை பயன்படுத்தலாம்” என்றும், “ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது” என்றும் கூறியதால், வெளிநாட்டு தலையீடு குறித்த அச்சம் ஈரானில் அதிகரித்துள்ளது.
மேலும், டிரம்ப், “ஈரானுடன் வியாபாரம் செய்யும் நாடுகள் மீது 25% சுங்கவரி விதிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஈரானுடன் வணிகமா? 25 சதவீதம் வரி- பொருளாதார தண்டனை.. எச்சரிக்கும் அமெரிக்கா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com