Deepavali muhurat trading | இந்து நாட்காட்டி ஆண்டு சம்வத் 2081 இன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளி முஹுரத் வர்த்தகம் நடைபெறும் என தேசிய பங்குச் சந்தைகள் (NSE) அறிவித்துள்ளது. இதேபோல் மும்பை பங்குச் சந்தையும் அறிவித்துள்ளது. இரு வணிக சந்தைகளும் தனித்தனியே செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி திருவிழா, அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் நிலையில் தீபாவளி முகூரத் வணிகம் நவ.1ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, பங்குச் சந்தைகள் சாதாரண வர்த்தகத்திற்கு மூடப்பட்டிருக்கும். ஆனால் சிறப்பு வணிகம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளியன்று முகூரலத் வர்த்தகத்தை முன்னிட்டு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு நடைபெறும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை வர்த்தகம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வத்தின் தெய்வத்தை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபாவளி, புதிய வாங்குதல்களுக்கு ஒரு நல்ல நாளைக் குறிக்கிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்றவற்றை வாங்குவது, இந்த புனித நாளில் முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் 25% ரிட்டன்: இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பாருங்க!
PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்…
Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…
Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த…
K Selvaperunthagai: தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக திகழ்கிறது என்று கூறிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் வசம் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்…
Terrorist Killed in Encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும், பாதுகாப்பு படையினர் ஆபரேஷனை தொடர்ந்துவருகின்றனர். அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் எனக்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்