Deepavali muhurat trading | இந்து நாட்காட்டி ஆண்டு சம்வத் 2081 இன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளி முஹுரத் வர்த்தகம் நடைபெறும் என தேசிய பங்குச் சந்தைகள் (NSE) அறிவித்துள்ளது. இதேபோல் மும்பை பங்குச் சந்தையும் அறிவித்துள்ளது. இரு வணிக சந்தைகளும் தனித்தனியே செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி திருவிழா, அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் நிலையில் தீபாவளி முகூரத் வணிகம் நவ.1ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, பங்குச் சந்தைகள் சாதாரண வர்த்தகத்திற்கு மூடப்பட்டிருக்கும். ஆனால் சிறப்பு வணிகம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளியன்று முகூரலத் வர்த்தகத்தை முன்னிட்டு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு நடைபெறும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை வர்த்தகம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வத்தின் தெய்வத்தை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபாவளி, புதிய வாங்குதல்களுக்கு ஒரு நல்ல நாளைக் குறிக்கிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்றவற்றை வாங்குவது, இந்த புனித நாளில் முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளில் 25% ரிட்டன்: இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பாருங்க!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூலை 1, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Anbumani Ramadosss: “திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக்
கொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள் என்ற தலைப்பில் பா.ம.க தலைவர்…
Kerala Lottery Result Today: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி. 9 லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (ஜூன் 30 2025) மாலை 3 மணிக்கு வெளியாகும்….
Hindu woman raped by local politician: வங்கதேசத்தில் இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி ஃபசூர் அலியை போலீசார் கைது…
Telugu TV anchor Swetcha: தெலுங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கின்றனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்