2004க்கு பிறகு முதல் முறை.. ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதில் இல்லாமல் ஒப்புதல்!

Ruckus in Lok Sabha: வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Published on: February 5, 2026 at 9:38 pm

புதுடெல்லி, பிப்.5, 2026: 2004க்குப் பிறகு முதல் முறையாக, பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, பிரதமரின் பதில் இல்லாமல், மக்களவையில் வியாழக்கிழமை (பிப்.5, 2026) நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு புதன்கிழமை பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர்ந்து நடந்த இடையூறு மற்றும் கோஷங்களால், சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியபோதும், வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவை அமர்வு, I.N.D.I.A கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை குறிவைத்து கோஷம் எழுப்பியதால் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியினர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உரையாற்றும் உரிமை மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.

2020 இந்திய-சீன எல்லை மோதல் குறித்து ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்பை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மேற்கோள் காட்ட அனுமதிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை (பிப்.3, 2026) மக்களவையில் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேஷன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2004ல் மன்மோகன் சிங்

முன்னதாக 2004ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாரதிய ஜனதா அவர் உரை நிகழ்த்த இடைஞ்சல் செய்ததாக கூறி அவர் பேச்சை தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீக்கிய அமைச்சரை துரோகி என்ற ராகுல்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

2004க்கு பிறகு முதல் முறை.. ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதில் இல்லாமல் ஒப்புதல்! Winter Session of Parliament

2004க்கு பிறகு முதல் முறை.. ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதில் இல்லாமல் ஒப்புதல்!

Ruckus in Lok Sabha: வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….

சீக்கிய அமைச்சரை துரோகி என்ற ராகுல்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு! Rahul Gandhi

சீக்கிய அமைச்சரை துரோகி என்ற ராகுல்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

Congress MP Rahul Gandhis ‘gaddar’ jibe: சீக்கிய அமைச்சரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் கூறியுள்ளார்….

இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்! M K Stalin

இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்!

M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….

மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. தேதி, இடம் முழு விவரம்! PM Narendra Modi visit to Madurai

மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. தேதி, இடம் முழு விவரம்!

PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்…

என் மகன் நிரபராதி.. யார் அந்த பெரிய இடம்? கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கண்ணீர்! Ajith Kumars Lock Up Death Case

என் மகன் நிரபராதி.. யார் அந்த பெரிய இடம்? கோயில் காவலாளி அஜித்

Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…

கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்! Kamal Haasan

கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்!

Kamal Haasan: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் முதல் பாராளுமன்ற உரையை லட்சோப லட்சம் மக்கள் புகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த…


Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com