திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

“இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம்: திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்?” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: September 9, 2025 at 5:25 pm

சென்னை, செப்.9, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “ஆனால், இங்கு தமிழ்நாட்டில்….?

பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்… தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ பரபரப்பு அறிக்கை.. முழு விவரம்!

தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை ஏன்? அதிமுக எம்பி இன்பதுரை விளக்கம்.! Inba Durai

தமிழகத்தில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை ஏன்? அதிமுக எம்பி இன்பதுரை

Inba Durai: தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதிமுக எம்பி…

சுரங்க தொழில்களின் வளர்ச்சியை தடுக்கும் முக்கிய காரணிகள் எவை? நிதி ஆயோக் முன்னாள் தலைவர் பரபரப்பு பேச்சு! Ex-NITI Aayog Chief on Mining Challenges

சுரங்க தொழில்களின் வளர்ச்சியை தடுக்கும் முக்கிய காரணிகள் எவை? நிதி ஆயோக் முன்னாள்

Ex-NITI Aayog Chief on Mining Challenges : சுரங்க தொழில்களின் வளர்ச்சியை தடுக்கும் முக்கிய காரணிகள் என்ற தலைப்பில் நிதி ஆயோக் முன்னாள் தலைவர் பேசினார்….

10ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை.. ஆடிசன் என்ற பெயரில்.. நடிகை ஸ்வாசிகா! Swasika's Love for Cinema

10ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை.. ஆடிசன் என்ற பெயரில்.. நடிகை ஸ்வாசிகா!

Swasika’s Love for Cinema : நடிகை ஸ்வாசிகாவுக்கு, சினிமா மீதான மோகம் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே ஏற்பட்டுள்ளது….

நீருக்கடியில் சண்டைக் காட்சி.. ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மைசா புதிய அப்டேட்! 'Mysa' New Update

நீருக்கடியில் சண்டைக் காட்சி.. ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மைசா புதிய அப்டேட்!

‘Mysa’ New Update : மைசா படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது….

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை.. சென்னை ஐகோர்ட் Tamil Nadu by elections 2026

தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை.. சென்னை ஐகோர்ட்

Tamil Nadu by elections 2026 : தமிழ்நாட்டில் உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது….

நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம்? தொழிலதிபர் மகளை மணக்கிறார்? Prabhas Marriage Buzz

நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம்? தொழிலதிபர் மகளை மணக்கிறார்?

Prabhas Marriage Buzz : நடிகர் பிரபாஸின் திருமணம் தொடர்பான வதந்திகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com