திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

“இரண்டாவது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த களமிறங்கிய கர்நாடகம்: திராவிட மாடல் அரசின் தூக்கமும், துரோகமும் எப்போது களையும்?” என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: September 9, 2025 at 5:25 pm

சென்னை, செப்.9, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “ஆனால், இங்கு தமிழ்நாட்டில்….?

பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்… தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைந்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : மல்லை சத்யா நிரந்தர நீக்கம்.. வைகோ பரபரப்பு அறிக்கை.. முழு விவரம்!

மலைசரிவு பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 9 பேர் துடிதுடித்து மரணம்.. 22 பேர் காயம்! Andhra Pradesh bus accident 2025

மலைசரிவு பள்ளத்தாக்கில் விழுந்த பஸ்.. 9 பேர் துடிதுடித்து மரணம்.. 22 பேர்

Andhra Pradesh bus accident 2025: ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜூ மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் மரணம் அடைந்தார்கள்….

மணிப்பூரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. புதிய திட்டங்கள் தொடக்கம்! President Droupadi Murmu Manipur visit 2025

மணிப்பூரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.. புதிய திட்டங்கள் தொடக்கம்!

President Droupadi Murmu Manipur visit 2025: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் மாநிலத்தில் நலத்திட்ட உதவிகள் தொடங்கிவைத்தார்….

தெலங்கானாவில் 84.28 சதவீத வாக்குப்பதிவு.. கிராம பஞ்சாயத்து தேர்தலில் குவிந்த வாக்காளர்கள்! Telangana Gram Panchayat elections 2025

தெலங்கானாவில் 84.28 சதவீத வாக்குப்பதிவு.. கிராம பஞ்சாயத்து தேர்தலில் குவிந்த வாக்காளர்கள்!

Telangana Gram Panchayat elections 2025: தெலங்கானா மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் முதல்கட்டமாக 84.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன….

ஜோர்டான் முதல் ஓமன் வரை.. பிரதமர் 4 நாள் பயணம்.. முழு விவரம்! Narendra Modi

ஜோர்டான் முதல் ஓமன் வரை.. பிரதமர் 4 நாள் பயணம்.. முழு விவரம்!

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்….

கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரிப்பு.. சிவராஜ் சிங் சௌகான் Shivraj Singh Chouhan

கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரிப்பு.. சிவராஜ் சிங்

Shivraj Singh Chouhan: கடந்த 10 ஆண்டுகளில் பயிர் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கூறினார்….

91வது வயதில் மரணம்.. யார் இந்த சிவ்ராஜ் பாட்டீல்? Shivraj Patil

91வது வயதில் மரணம்.. யார் இந்த சிவ்ராஜ் பாட்டீல்?

Shivraj Patil: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது 91வது வயதில் இன்று (டிச.12, 2025) மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்….

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com