பெங்களூரு, ஆக.19 2025: கர்நாடகா மாநிலத்தின் தாவங்கேரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடித்த 4 வயதான சிறுமி, செவ்வாய்க்கிழமை (ஆக.19 2025) பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கடுமையான ரேபிஸ் நோய் பாதிப்புகள் இருந்துள்ளன.
முன்னதாக, கதீரா பானு பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அவளைக் கடித்து குதறிவிட்டது.
அந்த நாய் அவளது முகத்தையும் உடலின் பிற பாகங்களையும் கடித்து இருந்தது. இதில் சிறமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவளை அவளது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாய் கடித்தால் ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Ravi Naik passes away: கோவா வேளாண் அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ரவி நாயக் மாரடைப்பால் காலமானார்….
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.16, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
MK Stalin: “எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது….
Anbumani Ramadoss: “ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின்…
Tamil News Live Updates October 15 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….