வாழை இலையில் விருந்து; ஒரு பக்கம் சோறு, மறுபக்கம் காய், கனி வைப்பது ஏன்?

Mythology | ஸ்ரீ ராமபிரான் காலத்திற்கு பின்னரே வாழை இலையில் கோடு வந்ததாம் அதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?

Published on: October 30, 2024 at 12:03 pm

Mythology | இலங்கையில் போர் முடிந்த பின் அயோத்திக்கு செல்லும் முன்னர் பரதவாஜ் முனிவரை தரிசித்து செல்ல வேண்டும் என்று ஸ்ரீ ராமபிரான் விரும்பினார். பரதவாஜ் முனிவர் ராமரையும் சீதையையும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து அன்புடன் வரவேற்றார். மேலும் ராமரிடம் இன்று இரவு எங்கே தங்கி உணவு உண்ட பின்னரே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ராமபிரானால் பரதவாஜ் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே சமயத்தில் தன் வருகை தாமதமானால் தன் சகோதரன் உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். எனவே அனுமனை அழைத்து எனக்காக நீ பரதனிடம் சென்று நான் அனைவருடன் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்து வா என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ ராமபிரானின் உத்தரவை ஏற்றுக்கொண்ட அனுமன் மீண்டும் திரும்பி வருவார் என்று பரதவாஜ் முனிவர் நினைவில் கொள்ளவில்லை. அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் சரியாக அனுமன் அங்கே வந்து விட்டார். இதைக் கண்ட ராமர் தன் இலையில் பாதியாக கோடு போட்டு அனுமனை தனக்கு எதிர் பக்கம் அமரச் செய்து உன்னும்படி கேட்டுக் கொண்டார்.

ராமபிரானின் பேச்சை மறுக்க முடியாமல் அனுமனும் அவ்வாறே செய்தார். உணவு பரிமாறுபவர்களிடம் இலையின் மேல் பக்கம் காய் மற்றும் பழ வகைகளை வைக்குமாறும் தன் பக்கம் அரிசி சாதம் மற்றும் பிற உணவு வகைகளை வைக்குமாறும் ராமர் கேட்டுக் கொண்டார். ராமபிரானும் அனுமனும் ஒரே இலையில் உணவருந்தி முடித்தனர்.

இந்த சம்பவமே ராமாயணம் காலத்திற்கு பின்னரே வாழை இலையில் கோடு வந்தது என்று கூறப்படுகிறது. இதுவே நடைமுறையில் இன்றளவும் விசேஷங்களில் நடைபெறும் விருந்தில் வாழை இலையில் நாம் அமர்ந்திருக்கும் பக்கம் சாதமும் எதிர்பாக்கம் பழ வகைகள் மற்றும் காய்கறிகள் பரிமாறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : அணு அளவும் தவறாத இந்திரஜித் பிரம்மாஸ்திரம்; மூச்சுப் பேச்சின்றி விழுந்த லட்சுமணன்: ஹனுமன் என்ன செய்தார் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com