வயநாடு மறு சீரமைப்பு பணிகள்; நிதி வழங்காத மோடி அரசு: பிரியங்கா பரப்புரை!

Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக துவக்கியுள்ளார் பிரியங்கா காந்தி.

Published on: October 29, 2024 at 9:31 pm

Wayanad Bypoll | கேரளாவில் வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பிரியங்கா காந்தி எல்.டி.எஃப்-ன் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சத்யன் மொகேரி மற்றும் கோழிக்கோடு மாநகராட்சியின் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். ஈங்கப்புழாவில் நடந்த கார்னர் மீட்டிங்கில் பேசிய அவர், பாஜக தலைமையிலான மத்திய அரசு மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்கு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மத்தியில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு மக்கள் மற்றும் தேசத்தின் மீது மரியாதை இன்மையை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவரது கொள்கைளின் நிலைப்பாடு இதனை காட்டுகிறது. மோடி அரசின் கொள்கைகள் எப்போதும் ஐந்து ஆறு தொழில் நண்பர்களுக்கு மட்டுமே சாதகமான வகையிலேயே இருக்கும். அது மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.

வயநாடு நிலச்சரிவு பாதிப்பின்போது பிரதமர் மாவட்டத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்டார். அவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், பல மாதங்களாகியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. என்று கூறினார்.

இதையும் படிங்க மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில், கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு தடை.. என்ன காரணம்? Coldrif cough syrup

தமிழ்நாட்டில், கோல்ட்ரிஃப் இருமல் சிரப்புக்கு தடை.. என்ன காரணம்?

Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன….

இதை நீங்க பார்க்கலீயா? அருந்ததி ராய்க்கு எதிரான பொதுநல வழக்கு.. மனுதாரருக்கு நீதிபதி கேள்வி! PIL against Arundhati Roys book

இதை நீங்க பார்க்கலீயா? அருந்ததி ராய்க்கு எதிரான பொதுநல வழக்கு.. மனுதாரருக்கு நீதிபதி கேள்வி!

PIL against Arundhati Roys book : பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கில், மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது….

கொட்டித்தீர்த்த கனமழை.. திருவனந்தபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை! Kerala

கொட்டித்தீர்த்த கனமழை.. திருவனந்தபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com