லாரியின் அடியில் சிக்கிய கார்; 5 பேர் உடல் நசுங்கி.. கேரளத்தில் பயங்கரம்!

Kerala Road Accident | கேரளத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: October 23, 2024 at 11:55 am

Kerala Road Accident | கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று , பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அய்யப்பன்காவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும் எதிர் திசையில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கியது. இதில், காரில் வந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 2 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கே கே விஜேஷ் (35), ரமேஷ் (31), விஷ்ணு (30), மற்றும் முகமது அப்சல் (17) என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாளம் இன்னும் காணப்படவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க நாக்பூரில் தடம் புரண்ட ரயில்; அதிகாரிகள் விசாரணை: காரணம் என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com