Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Sofia Firdous: ஒரிசாவின் காங்கிரஸ் எம்எல்ஏவான சோஃபியா ஃபிர்தோஸ், ராஜ்ய சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….
Delhi Fire Near Palam Metro: டெல்லி பாலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளனர். மீட்பு…
Air Freight: விமான சரக்கு இயக்கம் 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது….
LPG: எல்.பி.ஜி. உள்நாட்டு உற்பத்தி 30% அதிகரித்துள்ளது, என அரசு தெரிவித்துள்ளது….
Basmati rice prices fallen : பாஸ்மதி அரிசி விலை 7–10% வரை குறைந்துள்ளது. காரணம், ஈரான் போரால் மேற்காசியாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுமார் 4…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்