ஹரியானாவில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: முதல்வர் அறிவிப்பு

Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 6:21 pm

Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.

இதையும் படிங்க

மாநிலங்கள் தனியாக வரி வசூலிக்க தடை? சுரங்க திருத்த மசோதா தாக்கல் Mineral Taxes

மாநிலங்கள் தனியாக வரி வசூலிக்க தடை? சுரங்க திருத்த மசோதா தாக்கல்

Mineral Taxes: மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ள ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

“விளையாடுபவர்கள் வளர்ச்சி அடைவார்கள்”.. பதக்க வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! PM meets CWG winners

“விளையாடுபவர்கள் வளர்ச்சி அடைவார்கள்”.. பதக்க வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

PM meets CWG winners: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களை வென்று 4-வது இடம் பிடித்த…

சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. எதிர்ப்பு தெரிவிக்காத தாய்.. இளம் பெண்ணுக்கு ஜாமீன்! Delhi High Court

சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. எதிர்ப்பு தெரிவிக்காத தாய்.. இளம் பெண்ணுக்கு ஜாமீன்!

Delhi High Court : டெல்லியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் கைதான இளம் பெண்ணுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது….

வெளிநாட்டு நிதியை யார் கட்டுப்படுத்துகிறார்? பாஜக VS என்.ஜி.ஓ மோதல் ஏன்? FCRA Bill

வெளிநாட்டு நிதியை யார் கட்டுப்படுத்துகிறார்? பாஜக VS என்.ஜி.ஓ மோதல் ஏன்?

FCRA Bill : வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? எஃப்.சி.ஆர்.ஏ, விவகாரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாஜகவின் மசோதாவை எதிர்ப்பது ஏன்?…

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்! FCRA Amendment Bill

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்!

FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com