Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.
இதையும் படிங்க
Delhi SWAT cop Kajal Chaudhary Dead: டெல்லி ஸ்வாடு கமாண்டர் பெண் போலீஸ் காஜல் சௌதாரி மரணத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன….
Himachal CM Sukhu : ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுகு ஏன் ஆப்பிள் இறக்குமதிக்கு 100% சுங்கவரி கோரினார்? விளக்கமாக பார்க்கலாம்….
UAE President India Visit: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர், இந்தியாவுக்கு 3 மணி நேர குறுகிய பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர…
Bharat Sanatan Premier League: பாரத் சனாதன் லீக் கிரிக்கெட் போட்டிகள், தொடர்பான சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது….
IndiGo flight emergency landing: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்