Congress MP Manickam Tagore | தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மதுவிலக்கு என்பது காந்தியும் காமராஜரும் என காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்தவரை தமிழகத்தில் மது என்பது இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மீண்டும் வந்தால் மது இல்லாமல் இருக்கும். இப்போது இருக்கும் காலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டனுடைய குறிக்கோளும் மதுவை ஒழிப்பது.
ஆனால் அரசியல் பலம் என்பது வேறு கொள்கையின் ஈடுபாடு என்பது வேறு. அரசியல் பலத்தை பொறுத்தவரை மக்களின் எண்ணங்கள் எப்போது மாறுகின்றதோ, மக்கள் எப்போது எங்களுடைய உண்மையாக எண்ணத்தை புரிந்து கொள்கிறார்களோ, எப்போது எங்களுடைய வலிமையை புரிந்து கொள்கிறார்களோ அன்று காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மீண்டும் இந்த கொள்கையை கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது என்றார்.
கடந்த சில வாரங்களாக விசிக -வின் மது விலக்கு தொடர்பான வாதங்கள் தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், காங்கிரஸ் அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க
Karthi P Chidambaram | தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என கார்த்தி ப. சிதம்பரம் கூறினார்….
BJP vs Congress | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். காங்கிரஸ், பா.ஜ.க கருத்து என்ன என்று பார்க்கலாம்….
Armstrong Murder Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்….
“கூவம் விவகாரத்தில் வெள்ளை அறிக்கை கோரி நான் மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; உரிய பதில் வரவில்லை” என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்….
Velachery Congress MLA| இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்