‘தாழ்ப்பாள் இல்லாத தமிழ்; நாவில் இனிக்கும் காபி’: மு.க. ஸ்டாலினை சந்தித்தபின் வைரமுத்து ட்வீட்!

Vairamuthu met Stalin | தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பாடலாசிரியர் வைரமுத்து பேசியுள்ளார்.

Published on: October 3, 2024 at 11:35 am

Updated on: October 3, 2024 at 12:13 pm

Vairamuthu met M K Stalin | “முதலமைச்சர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த டிகாஷன் இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின்னர் வைரமுத்து கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வைரமுத்து இன்று (அக்.3,2024) முகாம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ’25 நிமிடங்கள் உள்ளம் திறந்து உரையாடினோம்” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து வைரமுத்து,

முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அவரது அண்மைக்காலத் தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துச் சொன்னேன். 25 நிமிடங்கள் உள்ளம் திறந்து உரையாடினோம். ஒரு நல்ல உரையாடல் என்பது நேர்த்தியான நெறிமுறைகள் கொண்டது. ஒரே மாதிரியான ஈடுபாடு இருவர்க்கும் வாய்க்க வேண்டும்.

அறையின் கதவுகள் பூட்டப்பட்டு இருதயத்தின் கதவுகள் திறந்திருக்க வேண்டும். ஒருவர் பேசிமுடித்து முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் அதை ஊடறுக்காத உரையாடல் நாகரிகம் வேண்டும். இந்த மூன்றும் உடையவர் முதலமைச்சர். அமெரிக்கா முதல் அப்பல்லோ வரையில் பிரதமர் முதல் துணைமுதல்வர் வரையில் அமைச்சரவை மாற்றம் முதல் அரசியல் விமர்சனம் வரையில்..

தாழ்ப்பாள் இல்லாத தமிழில் பல்வேறு எண்ணங்கள் பரிமாறிக்கொண்டோம். ஓர் ஆட்சியாளனுக்குரிய ஒரே ஒரு பெரும்பலம் ‘உற்சாகம்’. அந்த உற்சாகம் குறையாமல் உலா வாருங்கள் என்று வாழ்த்தி விடைகொண்டேன். முதலமைச்சர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த டிகாஷன் இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன் SK Praises Anbe Diana Team

இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன்

SK Praises Anbe Diana Team : அன்பே டயானா படக்குழுவினரை சிவ கார்த்திகேயன் வெகுவாக பாராட்டியுள்ளார்….

‘என் கண்ணியம் அவமதிப்பு’.. மார்பிங் படம் குறித்து ஜெயிலர்-2 நடிகை அன்னா Anna Rajan

‘என் கண்ணியம் அவமதிப்பு’.. மார்பிங் படம் குறித்து ஜெயிலர்-2 நடிகை அன்னா

Anna Rajan: தனது மார்பிங் படங்கள் வெளியான நிலையில் தனது கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது என நடிகை அன்னா ராஜன் தெரிவித்துள்ளார்….

‘தாயாக நீண்ட காலமாக காத்திருந்தேன்’.. முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சமந்தா! Samantha

‘தாயாக நீண்ட காலமாக காத்திருந்தேன்’.. முதல் குழந்தையை எதிர்பார்க்கும் சமந்தா!

Samantha: நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்….

சென்னையில் புதிய வீடு கிரகப்பிரவேஷம்.. ஸ்ருதிஹாசன் அசத்தல்! Shruti moves into new home

சென்னையில் புதிய வீடு கிரகப்பிரவேஷம்.. ஸ்ருதிஹாசன் அசத்தல்!

Shruti moves into new home : சென்னையில் புதிய வீட்டில் குடியேறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன….

₹1.80 கோடி மோசடி? நடிகர் ஆர்யா மீது வழக்குபதிவு.. பரபரப்பு தகவல்கள்.! Arya Booked in Fraud Case

₹1.80 கோடி மோசடி? நடிகர் ஆர்யா மீது வழக்குபதிவு.. பரபரப்பு தகவல்கள்.!

Arya Booked in Fraud Case : படப்பிடிப்பு முடிந்த பிறகும் ரூ. 1.80 கோடிக்கும் அதிகமான தொகை இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com