Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .
அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க
Assembly Election 2026: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மாஞ்சோலை தயாராகி வருகிறது; மலைப்பகுதியான இங்கு எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?…
Tisaiyanvilai: திசையன்விளை அருகே காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….
Thisayanvilai: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
Wife Killed in Tirunelveli Bus Stand: திருநெல்வேலியில் 24 வயது மனைவியை சந்தேகம் காரணமாக கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்துள்ளார்….
Tirunelveli: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 680 கிலோ 929 கிராம் கஞ்சா போலீசாரால் அழிக்கப்பட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்