வள்ளியூர்: தூய்மைப் பணியாளரை திட்டியதாக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Tirunelveli | திருநெல்வேலி மாவடடம் வள்ளியூர் அருகே, தூய்மைப் பணியாளருக்கு மிரட்டல் விடுத்ததாக ராஜ் குமார் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 6:33 pm

Updated on: September 28, 2024 at 7:50 pm

Tirunelveli | திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் மீனா. இவர் வள்ளியூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்துவருகிறார். இவர் அண்ணாநகர் பகுதியில் குப்பைகளை சேகரித்த போது, ராஜ்குமார் என்பவர் மனிதக் கழிவு கலந்த குப்பைகளை எடுக்க கூறியுள்ளார் .

அதற்கு மீனா மறுக்கவே அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துப்புரவு பணியாளர் அடுத்த தெருவில் பணியில் இருந்தபோது, அந்தக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் ராஜ்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து பேசிய ராஜ்குமார் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

எனினும், தனது பேரனின் மனிதக் கழிவுகளை கொட்டச் சென்றது எனது தவறுதான் என்றார். ஆனால் அவர் எடுக்கவில்லை. மேலும், அவர் என்னிடம் வேகமாக பேசினார். நான் அவரை திட்டவில்லை” என்றார். இந்தச் சம்பவம் வள்ளியூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிங்க

திசையன்விளை பழக்கடையில் திருட்டு.. பகீர் சி.சி.டி.வி காட்சி! Theft at Fruits shop in Thisaiyanvilai

திசையன்விளை பழக்கடையில் திருட்டு.. பகீர் சி.சி.டி.வி காட்சி!

Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச்…

திருநெல்வேலி 1,100 ஏக்கருக்கு உரிமை கோரி மசூதி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Madras High Court

திருநெல்வேலி 1,100 ஏக்கருக்கு உரிமை கோரி மசூதி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Madras High Court: 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட மானியத்தின் அடிப்படையில், நீதிபதி எம். தண்டபாணி 2.34 ஏக்கர் மட்டுமே அதற்கு…

கடம்பன்குளத்தில் ஆனித் திருவிழா; இன்று அனுமன் வாகன பவனி! Kadambankulam Ayya Vaikunda Temple

கடம்பன்குளத்தில் ஆனித் திருவிழா; இன்று அனுமன் வாகன பவனி!

Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்….

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு Former Tirunelveli MP Soundararajan

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு

Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்….

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது! Chennai

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது!

Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com