என்ஜினீயரிங் படிக்க ஆசையா? ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யலாம்!

Engineering Application: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை விண்ணப்பம் செய்யலாம்.

Published on: August 19, 2026 at 12:15 pm

சென்னை, ஆக.19, 2026: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், மேலும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) இணையதளமான https://www.tneaonline.org மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள், தேர்வு முடிவுகள் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், முன்பு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதியை பெற முடியும்.

மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க தவறினால், அடுத்த கட்ட சேர்க்கை செயல்முறையில் பங்கேற்க முடியாது என்பதால், ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்வது அவசியம் என கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 7.5 சதவீத இடஒதுக்கீடு.. கிருஷ்ணகிரியில் 21 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு தேர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com