4 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. தமிழகம் இன்று மழை எப்படி? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Alert : கிழக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: August 10, 2026 at 2:41 pm

புதுடெல்லி, ஆக. 10, 2026: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (ஆகஸ்ட் 10) சில மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார், விதர்பா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும் என IMD கணித்துள்ளது.

இதேபோன்ற வானிலை கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, ராயலசீமா, தெலங்கானா மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் இன்று பிற்பகல் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், பிற்பகல் நேரத்தில் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிலவும் வளிமண்டல சூழல் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்.. பிரதமர் மோடி அழைப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com