இந்தியா, சீனா முக்கிய குற்றவாளிகள்.. அமெரிக்கா புதிய மசோதா!

US Sanctions Bill: ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் தடைகள் சட்டம் 2026’ என அழைக்கப்படும் இந்த மசோதா, இந்தியா மற்றும் சீனாவை “முக்கியக் குற்றவாளிகள்” என சுட்டிக்காட்டுகிறது.

Published on: July 29, 2026 at 4:54 pm

நியூயார்க், ஜூலை 29, 2026: அமெரிக்க செனட் முன்னெடுத்துள்ள புதிய தடைகள் மசோதா, ரஷ்யாவின் போர்த் திறனை வலுப்படுத்தும் நாடுகளை குறிவைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் தடைகள் சட்டம் 2026’ என அழைக்கப்படும் இந்த மசோதா, இந்தியா மற்றும் சீனாவை “முக்கியக் குற்றவாளிகள்” என சுட்டிக்காட்டுகிறது. ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

செனட்டர் ரோஜர் விக்கர், இந்த மசோதா அமெரிக்காவின் நட்பு நாடுகளை பாதிக்காமல், சீனா மற்றும் இந்தியாவை நேரடியாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகக் கூறினார். அவர், “இந்தியா மற்றும் சீனாதான் ரஷ்யாவின் போர்த் திறனுக்கு வலுசேர்க்கும் முக்கியக் குற்றவாளிகள். அவை பெருமளவில் எரிசக்தி வாங்குகின்றன; ஆனால் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நமக்கு உதவுவதில்லை,” என்று வலியுறுத்தினார்.

இந்த மசோதா, மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரால் அழைக்கப்படுகிறது. கிரஹாம், உக்ரைனுக்கான வலுவான ஆதரவாளராக இருந்தவர். ஜூலை 11 அன்று அவர் காலமானதைத் தொடர்ந்து, செனட் சபை 86-12 என்ற வாக்கு வித்தியாசத்தில் ‘க்ளோச்சர்’ தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் மசோதா விவாதத்தை முடித்து வாக்கெடுப்புக்குச் செல்லும் வழி திறக்கப்பட்டது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து, மாஸ்கோவுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதே நாளில், கிரஹாமின் இறுதிச் சடங்கிலும் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.

இந்த தடைகள் மசோதா, ரஷ்யா மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய தந்திரமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ரஷ்ய எரிசக்தி மீது அதிகம் சார்ந்திருக்கும் இந்தியா மற்றும் சீனாவை இலக்காகக் கொண்டு, அமெரிக்கா தனது பன்னாட்டு அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க முயற்சிக்கிறது.

இதையும் படிங்க : ஆப்பிரிக்கா நாட்டில் மீண்டும் தலைதூக்கும் எபோலா? காங்கோவில் புதிய 3,200 பாதிப்புகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com