இமாச்சலப் பிரதேச ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி: பதவிக் காலம் எத்தனை நாள்கள் தெரியுமா?

Himachal Pradesh HC New CJ | நீதிபதி ஷக்தேர் ஹிமாச்சல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குறுகிய காலமே இருப்பார். இவர் அக்டோபர் 18ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

Published on: September 25, 2024 at 12:43 pm

Himachal Pradesh HC New CJ | இமாச்சலப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் (ஐகோர்ட்டு) தலைமை நீதிபதியாக ராஜீவ் ஷக்தேர் புதன்கிழமை (செப்டம்பர் 25, 2024) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரது நியமனத்திற்கான அறிவிப்பு செப்டம்பர் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.

அக்டோபர் 18ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால், நீதிபதி ஷக்தேர் ஹிமாச்சல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குறுகிய காலமே இருப்பார். அக்டோபர் 19, 1962 இல் பிறந்த நீதிபதி ஷக்தேர், ஏப்ரல் 11, 2008 அன்று டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலத்தில், திருமண பலாத்காரத்தை குற்றமாக்குவது உட்பட பல்வேறு விவகாரங்களில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

ஷக்தேர் தனது பள்ளிப் படிப்பை டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பா பள்ளியில் முடித்தார். வணிகவியல் பட்டதாரியான இவர், 1987 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி முடித்தார். தொடர்ந்து, 1987ல் வழக்கறிஞராக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கையில் அமர மறுத்த அதிஷி: ‘மன்மோகன் சிங்’ என பா.ஜ.க விமர்சனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com