‘பள்ளிகளில் பாலியல் தொல்லை; அன்பில் மகேஷின் தோல்வி’: காயத்ரி ரகுராம்

AIADMK Protest in Chennai | தமிழ்நாட்டில் கல்விக்கு போகும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டினார்.

Published on: September 24, 2024 at 2:15 pm

AIADMK Protest in Chennai | “தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் போதைப் பொருளும், டாஸ்மாக்கும் தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி தேவை” என அ.இ.அ.தி.மு.க மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டினார். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தொடர்ந்து பேசிய காயத்ரி ரகுராம், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

என்.சி.சி என்ற பெயரில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கனிமொழி உள்ளிட்ட யாரும் வாயை திறப்பதில்லை. பள்ளிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. டாஸ்மாக், போதைப் பொருள் தலைவிரித்து ஆடுகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள வீழ்ச்சிகளை பார்க்கும்போது இதனை அன்பில் மகேஷின் தோல்வியாகத்தான் பார்க்கிறேன்” என்றார். தொடர்ந்து, தேவை இல்லாமல் மகா விஷ்ணுவின் விவகாரத்தை ஊதி பெரிதாக்கியுள்ளனர். இதெல்லாம் திசை திருப்பல் நாடகங்கள்” என்றார்.

இதையும் படிங்க : மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம்: கோவையில் 72 ஸ்பாக்களுக்கு சீல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com