IS Inbadurai: தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது என டெல்லியில் இன்பதுரை எம்.பி பேட்டியளித்தார்.
IS Inbadurai: தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது என டெல்லியில் இன்பதுரை எம்.பி பேட்டியளித்தார்.

Published on: July 2, 2026 at 7:05 pm
புதுடெல்லி, ஜூலை 2, 2026: தமிழக வெற்றிக் கழக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது என அ.தி.மு.க. எம்.பி இன்பதுரை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் த.வெ.க அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது என்றார். மேலும், சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, ரெஸ்ட்ரூம் செல்வது போல் அவசர அவசரமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ எம்.ஆர் விஜயபாஸ்கர் த.வெ.க.வில் இணைந்துள்ளார் என்றார். மேலும், செயற்கைத் தனமாக தமிழகத்தில் எம்.எல்.ஏ தொகுதிகள் காலியாக ஆக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக உரிய சட்டங்கள் இல்லை என்பதால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க கூடாது என்றும் தமிழ்நாட்டில் கட்சித் தாவல் நடைபெறுவது வைகோ பேட்டி மூலம் உறுதியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : நீங்க மஞ்ச பத்திரிகையா? திட்டமிட்டு வந்தீரா? கடும் கோபத்தில் வைகோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com