அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி முறைகேடு உண்மையா? முழு விவரம்!

Ayodhya Ram Temple Project : அயோத்தி ராமர் கோவிலில் நிதி முறைகேடு ரூ.200 கோடிகள் வரை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Published on: June 24, 2026 at 4:39 pm

லக்னோ, ஜூன் 24, 2026: அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் ரூ.200 கோடி வரை நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு (SIT) இதற்கான ஆரம்ப அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, மேலும் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு விவரம்

ராமர் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் முறையாக கணக்கிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் முதலில் இந்த விவகாரத்தை வெளிப்படுத்தினார். அவர், கோவிலில் வழங்கப்பட்ட கோடிக்கணக்கான காணிக்கைகள் காணாமல் போயுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இதன் பின்னர், உத்தரப்பிரதேச அரசு ஜூன் 13, 2026 அன்று சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை தொடங்கியது.

விசாரணை நிலை

சிறப்பு விசாரணை குழு மற்றும் பிற அதிகாரிகள் 50-க்கும் மேற்பட்ட காணிக்கை எண்ணும் ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். இதுவரை ரூ.2 கோடி பணம், ஒரு சொகுசு கார், மூன்று ஐபோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடக்கமாக மட்டுமே கருதப்படுகிறது; மேலும் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், சிறப்பு விசாரணை குழு தனது ஆரம்ப அறிக்கையை ஜூன் 23, 2026 அன்று அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில் காணிக்கை கணக்கீட்டில் தவறுகள், கண்காணிப்பில் அலட்சியம், சி.சி.டி.வி பதிவுகள் தொடர்பான சந்தேகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், “ரூ.200 கோடி மேல் திருட்டு நடந்துள்ளது; முக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில், காங்கிரஸ், சிறப்பு விசாரணை குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

வழக்கின் தற்போதைய நிலை

சிறப்பு விசாரணை குழு, முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோவில் அறங்காவலர்கள் நகரை விட்டு செல்லக்கூடாது என்றும் சிறப்பு விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.
மேலும், காணிக்கைகளில் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்கள் தொடர்பான பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மும்பையில் கனமழை.. சாலையில் வெள்ளத்தில் மிதந்த கார்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com