இந்தியா அணி கூட்டம்.. தி.மு.க., ஆம் ஆத்மி புறக்கணிப்பு

INDIA bloc meeting: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதனை தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

Published on: June 8, 2026 at 12:38 pm

புதுடெல்லி, ஜுன் 8 2026: இந்தியா கூட்டணி (INDIA bloc) திங்கள்கிழமை டெல்லி அரசியல் சட்டக் கிளப்பில் கூட்டம் நடத்துகிறது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் நடைபெறுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை சரிசெய்வதற்கும், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அடுத்தகட்ட அரசியல் திட்டங்களை வகுப்பதற்கும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணி

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) கடுமையான தோல்வியை சந்தித்த நிலையில், மொத்தம் 23 அரசியல் கட்சிகள் இதில் பங்கேற்று, பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் புதிய வியூகங்களை விவாதிக்க உள்ளன. எனினும் திமுக மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால், கூட்டத்தின் அஜெண்டா கூட்டம் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க உள்ளதாகவும், மத்திய அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது, மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டம் இந்தியா கூட்டணிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.

திரிணமூல் காங்கிரஸ்

இதற்கிடையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வந்துள்ளார். 2026 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்த நிலையில், 58 எம்.எல்.ஏ.க்கள் தனியாக எதிர்க்கட்சித் தலைவரை நியமித்ததால், கட்சியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் 2029 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) எதிர்கொள்ள ஒருங்கிணைந்த தேர்தல் முன்னணியை உருவாக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தலாம் என கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணி கூட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திகா, “இந்தியா கூட்டணி தேர்தல், நெருக்கடி அல்லது தோல்வி ஏற்பட்டால் மட்டுமே ஒன்று கூடுகிறது. இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com