Singer’s Death Shocks Punjab : பஞ்சாப் பாடகி மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்; இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
Singer’s Death Shocks Punjab : பஞ்சாப் பாடகி மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்; இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி கனடா நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

Published on: May 20, 2026 at 9:43 am
சண்டிகர், மே 20, 2026: பஞ்சாபி பாடகி இந்தர் கௌர் (29) ஆறு நாட்கள் மாயமான நிலையில், லூதியானா நீலோன் கால்வாயில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த நிலையில், போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்; முக்கிய குற்றவாளி சுக்விந்தர் சிங் கனடாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
பாடகி மாயம்
இந்தர் கௌர் மே 13 அன்று வீட்டிலிருந்து கார் ஓட்டி வெளியே சென்றார், ஆனால் திரும்பவில்லை. இந்த நிலையில், பாடகி குடும்பம், சுக்விந்தர் சிங் (அலியாஸ் சுக்கா) என்பவரை கடத்தல் குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டியது. இதற்கிடையில், அவர், திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும், ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இந்தர் மறுத்ததாகவும் குடும்பம் தெரிவித்தது.
பாடகி கொலை- கைது
முதலில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது; பின்னர் கொலை குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. சுக்விந்தரின் தந்தை ப்ரிதம் சிங் மற்றும் நண்பர் கரம்ஜித் சிங் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், சுக்விந்தர், நேபாள வழியாக இந்தியா வந்ததும், குற்றம் செய்த பின் மீண்டும் கனடாவுக்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், உயிரிழந்த பாடகியின் குடும்பம், “போலீசார் தாமதமாகச் செயல்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது” என குற்றஞ்சாட்டியுள்ளது. அதில், மே 15ஆம் தேதியன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க : நினைவுகளை மீட்டெடுக்கும் காதல் கதை.. மெயின் வாபஸ் ஆவுங்கா ட்ரெய்லர் வெளியீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com