மதுரையில் வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. முருகன் என் குலத்தெய்வம்.. சுந்தர் சி

Palani Temple : பழனி தண்டாயுதபானி முருகர் கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி சாமி தரிசனம் செய்தார்.

Published on: May 2, 2026 at 3:17 pm

திண்டுக்கல், மே 2, 2026: நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி, தனது மனைவி குஷ்பு மற்றும் உறவினர்களுடன் பழனி தண்டாயுதபானி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் தேர்தலில் வெற்றிப் பெற மனமுருகி வேண்டினார். மேலும், அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சுந்தர் சி, போகர் சந்நிதி மற்றும் ஆனந்த விநாயகர் கோவிலில் தரசினம் செய்தார். சுந்தர் சி குடும்பத்தினருடன், நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயாரும் கோவிலில் தரிசனம் செய்தார்கள்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, “மதுரை மத்திய தொகுதியில் வெற்றிப் பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன; பழனி எனது பூர்விகம். முருகப் பெருமான் எனது குலத் தெய்வம். அவரை காண நான் இங்கு அடிக்கடி வருவேன்” என்றார்.

இதையும் படிங்க : அம்மா அம்மாதான்.. உருகிய ரசிகர்கள்.. விஜய் ஆண்டனியின் நூறு சாமி படப் பாடல் வெளியீடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com