சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டர்; ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை: யார் இவர்?

சென்னையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Published on: September 18, 2024 at 10:08 am

Updated on: September 18, 2024 at 10:09 am

Chennai Encounter | சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இவர் 59 வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.
இவர் சிறையில் இருந்து வெளிவந்து தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்தார். ஆந்திரா- தமிழ்நாடு எல்லையில் உள்ள காடுகளில் பதுங்கி இருந்து தனது ஆட்கள் மூலமாக கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை கட்டவிழ்த்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீசார் இவரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் வியாசர்பாடி பி.எஸ்.என்.எல் குடியிருப்பு அருகே நடந்துள்ளது.
இன்று (செப்.18, 2024) காலை கொடுங்கையூர் முல்லை நகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது. அந்தக் காரை வியாசர்பாடி பி.எஸ்.என்.எல் பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதையும் படிங்க : 3 நாள்களில் 195 வழக்கு; 334 பேர் கைது: சென்னையில் போலீஸ் அதிரடி வேட்டை!

அப்போது காருக்குள் காக்கா தோப்பு பாலாஜி இருந்துள்ளார். போலீசாரை பார்த்ததும் காக்கா தோப்பு பாலாஜி தான் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.
இதில் போலீஸ் வாகனத்தின் மீதும், மற்றொரு குண்டு அங்கிருந்த சுவர் ஒன்றின் மீதும் பட்டுள்ளது. இந்த நிலையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தற்பாதுகாப்புக்காக சுட்டதில் காக்கா தோப்பு பாலாஜி மார்பில் குண்டடி பட்டு உயிரிழந்தார்.

காக்கா தோப்பு பாலாஜி உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்மீது சில தீவிரமான கொலைக் குற்றச்சாட்டுகளும் உள்ளன. வடசென்னையை தனது கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கொலைகளை அறங்கேற்றிவர் இந்த காக்கா தோப்பு பாலாஜி. சிறு வயதிலே ஆசிரியர் கேட்ட கேள்விக்கு தனது உறவினர் துரையை போல் தானும் ரவுடி ஆவேன் என காக்கா தோப்பு பாலாஜி பதிலளித்துள்ளார்.

9ஆம் வகுப்பு வரை படித்துள்ள காக்கா தோப்பு பாலாஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை திட்டமிட்டு கொன்றார். இதுதான் இவரின் முதல் கொலை என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் அடர் காட்டுக்குள் துப்பாக்கிச் சண்டை: 9 நக்ஸலைட்டுகள் என்கவுன்ட்டர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com