Chhattisgarh encounter | சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 9 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
Chhattisgarh encounter | சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுன்ட்டர் நடவடிக்கையில் 9 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
Published on: September 3, 2024 at 2:38 pm
Chhattisgarh encounter | சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக.3, 2024) தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்ஸலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடந்த என்கவுன்டரில் 9 நக்சல்கள் கொல்லப்பட்டனர். சம்பவ பகுதியில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.
சம்பவ பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது என்று பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com