அக்ஷய் குமார் மகளுக்கு ஆபாச மெசேஜ்.. போலீசில் சிக்கிய நபர்!

Akshay Kumar daughter : நடிகர் அக்ஷய் குமாரின் மகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published on: April 26, 2026 at 10:47 pm

மும்பை, ஏப்.26, 2026: நடிகர் அக்ஷய் குமாரின் மகளுக்கு ஆன்லைனில் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் அவர்?

அக்ஷய் குமார் மகளுக்கு ஆபாச மெசேஜ்

2025 அக்டோபர் மாதம், நடிகர் அக்சய் குமார் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது மகள் நிதாராவுக்கு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
அதாவது, அக்ஷய் குமார் மகள் நிதாரா ஆன்லைன் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் பாலியல் ரீதியான புகைப்படங்களை கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

உடனடியாக நிதாரா தனது தாய் ட்விங்கிள் கன்னாவிடம் தெரிவித்தார். இதையடுத்து அக்சய் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா சைபர் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு மூலம் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யார் அவர்?

எனினும், அந்த நபர் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை; அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : நிர்வாண வீடியோகால்.. ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல்.. யார் அந்த இன்ஸ்டாகிராம் அழகி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com