Wheat Procurement Target Up 15%: குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் இலக்கை அரசு 15% உயர்த்தியுள்ளது.
Wheat Procurement Target Up 15%: குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை கொள்முதல் இலக்கை அரசு 15% உயர்த்தியுள்ளது.

Published on: April 25, 2026 at 12:02 pm
Updated on: April 25, 2026 at 12:03 pm
புதுடெல்லி, ஏப்.25, 2026: மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) அடிப்படையில் கோதுமை கொள்முதல் இலக்கை 15 சதவீதம் அதிகரித்து, தற்போதைய பருவத்திற்கான இலக்கை 30 மில்லியன் டன்னிலிருந்து 34.5 மில்லியன் டன்னாக உயர்த்தியுள்ளது. விவசாயிகளின் பயிர்கள் திடீர் மழையால் சேதமடைந்ததால் அவர்களுக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக உணவுத் துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய ரோலர் பிளவர் மில்லர்ஸ் கூட்டமைப்பின் ஆண்டு கோதுமை ஆய்வறிக்கையை சஞ்சீவ் சோப்ரா புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை (ஏப்.24, 2026) வெளியிட்டார்.
அப்போது அவர், மாநில வாரியாக கொள்முதல் இலக்குகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். மத்யபிரதேசத்தில் 10 மில்லியன் டன், உத்தரப்பிரதேசத்தில் 2.5 மில்லியன் டன், ராஜஸ்தானில் 2.35 மில்லியன் டன், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5,000 டன் மற்றும் இந்த ஆண்டில் டெல்லியிலிருந்தும் சில அளவு கோதுமை கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
பஞ்சாப், ஹரியானா, மத்யபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்களில், திடீர் மழையால் சேதமடைந்த பயிர்களை அதிக அளவில் வாங்குவதற்காக தரநிலைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : குளிர்பானத்தில் போதைப் பொருள்.. கர்நாடகாவில் அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com