தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் குரல் மு.க ஸ்டாலின்.. மல்லிகார்ஜுன் கார்கே

Mallikarjun Kharge on delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின் என மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Published on: April 21, 2026 at 4:07 pm

சென்னை, ஏப்.21, 2026: தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் மு.க ஸ்டாலின்தான் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

சென்னையில் மல்லிகார்ஜுன் கார்கே

இது குறித்து சென்னையில் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “டெல்லிக்கு தலைவணங்காத மு.க ஸ்டாலின் போன்ற தலைவர்கள்தான் நமக்கு தேவை” என்றார். மேலும், தென் மாநிலங்களுக்கு எதிரான மசோதாவை தீயிட்டுக் கொளுத்தியவர் மு.க ஸ்டாலின்” எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை வேளச்சேரி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, “2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றிய நிலையில், அதை அமல்படுத்தாதது ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இட ஒதுக்கீட்டை இணைக்க முயற்சிப்பதன் மூலம், பாஜக அரசு நாடாளுமன்றத்தில் ஒரு ஆபத்தான ஆட்டத்தை ஆட முயன்றது.

தமிழ்நாட்டிற்குப் பரிசளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் நாடாளுமன்றத்தில் அதன் குரலைக் முடக்க முயன்றனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சி முன்னின்று வழிநடத்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்த்தன.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

மோடி அரசின் முயற்சியை நாம் ஒன்றிணைந்து தோற்கடித்தோம். இது ஒரு சிறிய வெற்றியல்ல. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்குமான வெற்றி: நீதிக்கான வெற்றி, கூட்டாட்சிக்கான வெற்றி. தமிழ்நாடு முன்னேறிச் செல்லும் வேளையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, பொருளாதாரத்திற்கு அது ஆற்றிய பெரும் பங்களிப்பு இருந்தபோதிலும், அதனை ஒரு மாற்றாந்தாய் பிள்ளையைப் போல நடத்தி, பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறது.

மாநிலம் விகிதாசாரத்திற்கு மிகக் குறைவான வரி வருவாயையே பெறுகிறது, மேலும் மத்திய அரசின் திணிப்பை எதிர்த்ததற்காக சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் புயல் காலங்களில்கூட, மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. பாரபட்சமின்றி செயல்படுவதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிடும் ஆளுநரே இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை ஊக்குவித்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நான் கண்ட கனவு திட்டங்களை செயல்படுத்துகிறார்.. அன்பிலுக்கு வாக்கு கேட்ட கமல்ஹாசன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com