Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ‘தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசித்தார்.
Narendra Modi: பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்; அப்போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ‘தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசித்தார்.

Published on: April 17, 2026 at 12:26 pm
Updated on: April 17, 2026 at 12:32 pm
புதுடெல்லி, ஏப்.17, 2026: பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை (ஏப்.16, 2026) பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து விவாதித்தார். ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பையும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இந்தத் தொலைபேசி உரையாடலை பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தொடங்கினார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக நமது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்வோம்” என்று கூறினார்.
J'ai reçu un appel téléphonique de mon cher ami, le président Emmanuel Macron. Nous avons discuté de la situation en Asie occidentale et sommes tombés d'accord sur la nécessité urgente de rétablir la sécurité et la liberté de navigation dans le détroit d'Ormuz.
— Narendra Modi (@narendramodi) April 16, 2026
Nous poursuivrons…
(பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்)
இதற்கிடையில், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மார்ச் 5 அன்று, பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் மேக்ரோனும் தொலைபேசியில் பேசியபோது, மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் நிலைமை குறித்த தங்களின் பொதுவான கவலைகள் மற்றும் உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின் அவசியம் குறித்தும் விவாதித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சாணக்கியரே அதிர்ந்து இருப்பார்.. அமித் ஷாவை விமர்சித்த பிரியங்கா காந்தி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com