Dr Aishwarya Rao: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருணை விருது, மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்-வுக்கு வழங்கப்பட்டது.
Dr Aishwarya Rao: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருணை விருது, மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்-வுக்கு வழங்கப்பட்டது.

Published on: February 27, 2026 at 12:19 pm
Updated on: February 27, 2026 at 12:22 pm
சென்னை, பிப்.27, 2026: புதிய தலைமுறைக்கான கருணை விருது டாக்டர் ஐஸ்வர்யா ராவ்-க்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற அவர், “நான் விருதுகளை நம்புவதில்லை. இந்த விருதை நான் ஏற்றுக்கொள்ளக் காரணம், புதிய தலைமுறை டிவியை தொடர்ந்து விரும்பிப் பார்க்கிறேன். குறிப்பாக, நேர்ப்படப்பேசு. அரசியலில் எனது கண்ணைத் திறந்ததில் அந்த நிகழ்வும் ஒன்று” எனத் தெரிவித்தார்.
யார் இந்த மருத்துவர்
குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஐஸ்வர்யா ராவ், மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்காக போராடி வருகிறார். இவர், 2016-ஆம் ஆண்டு சென்னை நகரில் “பெட்டர் வேர்ல்ட் ஷெல்டர்” என்ற மறுவாழ்வு மையத்தை நிறுவினார். இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றியது என்றால் அது மிகையல்ல. மேலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கு -பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இந்த மையத்தின் நோக்கம் ஆகும்.
இங்கு தங்கியிருப்போர் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் முன்னேற ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிஜ வாழ்வில் இணைந்த கீதா கோவிந்தம்.. மனதார பாராட்டிய தயாரிப்பாளர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com