புதுடெல்லி, பிப்.5, 2026: 2004க்குப் பிறகு முதல் முறையாக, பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, பிரதமரின் பதில் இல்லாமல், மக்களவையில் வியாழக்கிழமை (பிப்.5, 2026) நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு புதன்கிழமை பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர்ந்து நடந்த இடையூறு மற்றும் கோஷங்களால், சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியபோதும், வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவை அமர்வு, I.N.D.I.A கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை குறிவைத்து கோஷம் எழுப்பியதால் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியினர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உரையாற்றும் உரிமை மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.
2020 இந்திய-சீன எல்லை மோதல் குறித்து ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்பை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மேற்கோள் காட்ட அனுமதிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை (பிப்.3, 2026) மக்களவையில் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேஷன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
2004ல் மன்மோகன் சிங்
முன்னதாக 2004ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாரதிய ஜனதா அவர் உரை நிகழ்த்த இடைஞ்சல் செய்ததாக கூறி அவர் பேச்சை தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீக்கிய அமைச்சரை துரோகி என்ற ராகுல்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு!
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல்…
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன….
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…
IT Employee Dies on Field : சென்னையில் கிரிக்கெட் விளையாடிய ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது….
RS Bharathi : திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன….