புதுடெல்லி, பிப்.5, 2026: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ரயில்வே இணை அமைச்சரான ரவ்நீத் பிட்டு சிங்கை பார்த்து துரோகி என விமர்சித்தார்.
இதனை சீக்கியர்களுக்கு எதிரான அவமரியாதை என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, “அவரது அகங்காரம் உச்சத்தில் உள்ளது. காங்கிரஸை விட்டு சென்ற மற்றவர்களை பார்த்து அவர் அவ்வாறு கூறவில்லை. சீக்கியரை பார்த்துதான் அவ்வாறு கூறினார்.
இது சீக்கியர்களுக்கு அவமரியாதை; குருமார்களுக்கு அவமதிப்பு. மேலும், இது காங்கிரஸில் சீக்கியர்களுக்கு எதிராக நிறைந்திருக்கும் வெறுப்பின் வெளிபாடு. அவர் (ராகுல் காந்தி) துரோகி என கூறியவர் நாட்டுக்காக அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.
மேலும், “மேலும், “அவர் தனது அரசியல் சிந்தனையை மாற்றியதற்காக துரோகியா? இது சிறிய சொல் அல்ல. ஒரு குடிமகனை துரோகி என அழைப்பதை நாடு எப்படி சகித்துக் கொள்ளும்? இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸை மூழ்கடிப்பார்கள்” என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டுக்கு தயாராகும் தமிழ்நாடு.. மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (பிப்.6, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Ruckus in Lok Sabha: வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது….
Congress MP Rahul Gandhis ‘gaddar’ jibe: சீக்கிய அமைச்சரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும் கூறியுள்ளார்….
M K Stalin: சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது….
PM Narendra Modi visit to Madurai: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்; பிப்ரவரி 28ஆம் தேதி அவர் மதுரையில்ஜதேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில்…
Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை…