Ajit’s wife as deputy CM: மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மனைவி தேர்வாகியுள்ளார்.
Ajit’s wife as deputy CM: மராட்டிய மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவார் மனைவி தேர்வாகியுள்ளார்.

Published on: January 31, 2026 at 4:50 pm
மும்பை, ஜன.31, 2026: மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாலை 5 மணிக்கு பதவியேற்பு நடைபெறவுள்ள நிலையில், அஜித் பவாரின் உறவினர் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) நிறுவனர் ஷரத் பவார், பிப்ரவரி 12 அன்று அஜித் தலைமையிலான என்சிபி மற்றும் தனது பிரிவு இணையும் என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், மாமனார்-மருமகன் மற்றும் பிற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட இறுதி சந்திப்பு குறித்த வீடியோ ஒன்று வெளிவந்ததால், அரசியல் சூழ்நிலைக்கு மேலும் மர்மம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவில் கட்சியின் ஒருங்கிணைப்பு 12ஆம் தேதி நடைபெறும் என அஜித் பவார் கூறியதாக கூறப்படுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஷரத் பவார் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து தொடங்கிய என்சிபி, 2023-இல் பிளவுபட்டது. அப்போது அஜித் பவார் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை எடுத்துக்கொண்டு பாஜக தலைமையிலான மகாயுதி அரசில் இணைந்தார்.
இந்நிலையில், ஷரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே தலைமையிலான பிரிவு என்சிபி (எஸ்.பி.) என அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சரவையில் இடமில்லை.. காங்கிரஸுடன் கூட்டணி.. அடித்து ஆடும் திமுக!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com