Karur stampede case: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவர்.
Karur stampede case: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் தமிழகத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

Published on: January 12, 2026 at 6:17 pm
புதுடெல்லி ஜனவரி 12, 2026: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் கரூரில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி சனிக்கிழமை பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர்; இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை தற்போது மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழகத்தின் உயர் அதிகாரியான டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் இன்று (ஜனவரி 12, 2026), புதுடில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் பொதுக்கூட்ட பேரணியின் போது, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்புகள் உட்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன எனக் கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில் செய்தியை போலீசார் முன்பு தமிழகத்தின் உயர் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆஜரானது, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கரூர் கூட்ட நெரிசல் மரண சம்பவம் நடைபெற்ற போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவா சிறுவாதம் பணியாற்றினார்; தற்போது டேவிட்சன், ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஆட்சியில் பங்கு என எந்த நிபந்தனையும் வைக்கவில்லை.. வைகோ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com