Anbumani Ramadoss: ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கூறியுள்ள அன்புமணி ராமதாஸ் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Published on: December 27, 2025 at 4:58 pm
Updated on: December 27, 2025 at 5:01 pm
சென்னை, டிச. 27 2025: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிடம், திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த கூச்சல் குழப்பங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ்,” ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது; அதே நேரம் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும்” என்றார்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. இதனை சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வதையும் அவர் ஏற்கவில்லை.
யாருடன் கூட்டணி?
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் இடம் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பான கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ்,” 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் உள்ளன; யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என்பதை விரைவில் அறிவிப்போம்” என்றார்.
இதையும் படிங்க; ‘ராமதாசை அவமானப்படுத்துவதற்கு சமம்’.. ஜிகே மணி ஆதங்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com