Tiruvannamalai Agricultural Exhibition: விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நாங்கள் தான் முன்னோடி; மூன்று முறை வேளாண் கண்காட்சியை நடத்தி உள்ளோம் என்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
Tiruvannamalai Agricultural Exhibition: விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நாங்கள் தான் முன்னோடி; மூன்று முறை வேளாண் கண்காட்சியை நடத்தி உள்ளோம் என்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

Published on: December 27, 2025 at 3:28 pm
திருவண்ணாமலை டிசம்பர் 27, 2025; திருவண்ணாமலையில் இன்று (சனிக்கிழமை) வேளாண் கண்காட்சி தொடங்கியது. இந்த வேளாண் கண்காட்சியை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மு க ஸ்டாலின் பேசும்போது,” விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதில் முன்னோடி திராவிட மாடல் அரசு தான்” என பெருமிதம் தெரிவித்தார்.
விவசாயிகள் போல் சிலர் வேடமிட்டு….
தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின், ” சிலர் விவசாயிகள் போல் வேடமிட்டு இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள்” என விமர்சித்தார்.
முன்னதாக விவசாயிகள் மற்றும் விவசாயத்துக்கு முன்னோடியாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
விவசாய கண்காட்சியை தொடங்கி வைக்க, திருவண்ணாமலை சென்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வழிநெடுகிலும் தொண்டர்கள் இருந்து மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரும் தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார்.
இதையும் படிங்க; பணி நிரந்தரம் கோரி பேரணி.. சென்னையில் தூய்மை பணியாளர்கள் அதிரடி கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com