விஜய்க்கு போன் போட்ட ராகுல் காந்தி.. தமிழக அரசியலில் பரபரப்பு!

Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக, த.வெ.க தலைவர் நடிகர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.

Published on: September 29, 2025 at 5:18 pm

சென்னை, செப்.29, 2025: கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

காந்தி ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்தும் காயமடைந்தவர்களின் சிகிச்சை குறித்தும் விசாரித்தார். இந்த நிலையில் மு.க ஸ்டாலின், “ராகுல் காந்தியின் மனமார்ந்த அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி” தெரிவித்தார்.

விஜய்யிடம் பேசிய ராகுல் காந்தி

இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தமிழகை வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் டெலிபோனில் பேசியுள்ளார். அப்போது, நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.. எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

த.வெ.க மீது வழக்குப்பதிவு

இதற்கிடையில், கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களுக்கு, த.வெ.க நிர்வாகிகள் மீது அலட்சியப் போக்கு இருப்பதாக கூறி கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ அல்லது சுயாதீன விசாரணை கோரி த.வெ.க. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இழப்பீடு

கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக அதிகரித்து வரும் விமர்சனங்களை விஜய் எதிர்கொண்டு வருகிறார். இதற்கிடையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கரூர் கூட்டநெரிசல் மரணம்.. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com