Sengottaiyan: “தாம் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை” என செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Sengottaiyan: “தாம் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை” என செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Published on: September 26, 2025 at 4:31 pm
சென்னை, செப்.26, 2025: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை; எனினும் சிலர் வேண்டுமென்று என்னை பற்றி வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது. யார் வதந்திகளை பரப்புகிறார்களோ அவர்களே நிறுத்திக் கொண்டால் நல்லது. இது எச்சரிக்கை அல்ல. அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மேலும், “மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் கனவு நிறைவேற வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அதற்கு மேல், எந்த கருத்தையும் நான் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை” என்றார்.
மேலும், வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது எனக் கூறிய செங்கோட்டையன் ஓபிஎஸ்ஸை நான் சந்திக்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.
திட்டமிட்ட சதி
தொடர்ந்து, “எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக, சிலர் திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள்” என்றார்.
மேலும், நல்ல செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமே தவிர, இதுபோன்று வதந்திகளை பரப்பக் கூடாது. 45 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தூய்மையாக பணியாற்றியுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க : UGC நிர்ணயித்த ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு.. தி.மு.க மீது நயினார் குற்றச்சாட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com