ஜெருசலேம், செப்.22, 2025: இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்றும் அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த வாரம் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை “பாலஸ்தீன அரசை” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. இதற்கிடையில், பிரான்ஸ் போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு முறையான மாநில அந்தஸ்து அங்கீகாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா தலைவர்களுக்கு அனுப்பிய செய்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன நாடு இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.
அதில், “அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு எனக்கு ஒரு தெளிவான செய்தி உள்ளது.
நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு செய்தியும் உள்ளது. அது நடக்காது. ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் நிறுவப்படாது” என்றார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் குஜராத் பெண் சுட்டுக்கொலை.. 21 வயது குற்றவாளி கைது!
UK Crime: இங்கிலாந்தில் இளைஞர் கொலை வழக்கில், தனது மகன் பயன்படுத்திய கொலை ஆயுதத்தை சம்பவ இடத்திலிருந்து அகற்றி விசாரணைக்கு இடையூறு செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
Donald Trump: அமெரிக்கத் தேர்தல்களில் சீனா தலையிடுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்….
Indian illegal migration to US falls : அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம் 69 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது….
Hormuz Attack: ஹோர்முஸ் நீரிணையில் UAE-க்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை ஊழியர்…
UNSC 2028 : 2028-29 காலகட்டத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் தேர்தல் பிரசாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நியூயார்க்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்