ஜெருசலேம், செப்.22, 2025: இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு ஆளாக்கும் என்றும் அமைதியான தீர்வுக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த வாரம் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை “பாலஸ்தீன அரசை” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. இதற்கிடையில், பிரான்ஸ் போன்ற நாடுகளும் பாலஸ்தீனத்திற்கு முறையான மாநில அந்தஸ்து அங்கீகாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா தலைவர்களுக்கு அனுப்பிய செய்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன நாடு இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.
அதில், “அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு எனக்கு ஒரு தெளிவான செய்தி உள்ளது.
நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு செய்தியும் உள்ளது. அது நடக்காது. ஜோர்டான் நதிக்கு மேற்கே எந்த பாலஸ்தீன அரசும் நிறுவப்படாது” என்றார்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் குஜராத் பெண் சுட்டுக்கொலை.. 21 வயது குற்றவாளி கைது!
Kenya women Protest: பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பெண் கொலைகள் அதிகரித்து வருவதாகக் கூறி, கென்யாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்….
Tiffany Trump at Taj Mahal : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இந்தியா வந்துள்ள நிலையில், அவர் தாஜ்மஹால் மற்றும் அக்ஷர்தாமை கண்டுகளித்தார்….
Kenya School Fire accident: கென்யாவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்….
US Denies Hormuz Report : வெள்ளை மாளிகை, ஈரான் அரச ஊடகங்கள் வெளியிட்டதாகக் கூறப்படும் “அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த வரைவு” குறித்த செய்தியை “முழுமையான பொய்”…
New Ebola Vaccine : எபோலா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்