சென்னை, செப்.15, 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவித்தொகை கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பயனாளிக்கு பதிலாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக கிடைத்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதாவது, பயனாளியின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்ணில் ஏற்பட்ட தவறுதான் குழப்பத்திற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது, கொண்டம்பட்டியைச் சேர்ந்த பயனாளியான ஆர். மகேஸ்வரி (50) என்பவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கவிருந்த நிலையில், அது, உத்தரப் பிரதேச பெண்ணின் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மகேஸ்வரி கூறுகையில், “நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தோகை உதவித் தொகைக்கு விண்ணப்பித்தேன். நிதி கிடைக்காதபோது, எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினேன்” என்றார்.
மேலும், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எனது பெயரை மீண்டும் திட்டத்தில் சேர்க்குமாறு ஒரு மனுவை சமர்ப்பித்தேன். எனது மனுவை பரிசீலித்த பிறகு, நான் ஏற்கனவே திட்டத்தில் பயன்பெறுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், எனது ஆதார் விவரங்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வேறு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபரின் கணக்கில் மாதா மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, வங்கி அதிகாரிகள் எனது விசாரணைகளை முறையாகக் கவனிக்கவில்லை” என்றார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஜய் வெல்வாரா என்பதை சொல்ல முடியாது.. கார்த்தி ப சிதம்பரம்!
CM Vijay Trichy Visit: திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை வழங்குவேன் என்று உறுதியளித்தார்….
Anushka Sharma: ஐபிஎல் 2026 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றியை நடிகை அனுஷ்கா சர்மா உணர்ச்சிபூர்வமாக கொண்டாடினார்….
Suman Kalyanpur Passes Away: பத்ம பூஷண் விருதுபெற்ற பாடகி சுமன் கல்யாண்பூர் வயது மூப்பு காரணமான உயிரிழந்தார்….
Nandambakkam accident: தொழிலாளர் தங்குமிடத்தில் படிக்கட்டு கைப்பிடி உடைந்து விழுந்த விபத்தில் வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
Commercial Cylinder Price Hike: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு…
Narendra Modi: 22-வது ஆசிய 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிற்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்….