கடலூர் கிரிம்சன் தொழிற்சாலை தொடர் விபத்துகள் குறித்து விசாரணை.. வைகே வலியுறுத்தல்!

Vaiko: கடலூர் கிரிம்சன் தொழிற்சாலை தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Published on: September 13, 2025 at 7:49 pm

சென்னை, செப்.13, 2025: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் கடலூர் – சிதம்பரம் சாலையில் இருக்கும் சிப்காட் தொழில் மையத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததாலும், புதுப்பிக்கப்படாத இயந்திரங்களாலும் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அப்பாவி மக்களும், ஊழியர்களும் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் நேரிடுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “கிரிம்சன் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பூச்சி மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி’ கிரிம்சன் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட விபத்தில், ரசாயனப் புகை வெளியேறியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தொழிற்சாலையை ஒட்டியிருக்கும் குடிகாடு கிராமம் முழுவதும் புகைமண்டலமாக மாறியதுடன் அதையடுத்து அப்பகுதியில் இருந்த அந்த மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் இருமல் ஏற்பட்டு, அடுத்தடுத்து மயங்கி விழு ஆரம்பித்தனர்.

அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறி கூச்சலிட்டனர். அதற்கடுத்த சில நிமிடங்களில் அவர்களும் மயங்கி விழுந்தனர். தொடர்ந்து மயக்கமடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார்.

மேலும், “சிவராமன் பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியதால் கிரிம்சன் நிர்வாக இயக்குனர் அவர் மீது காவல்துறையில் பொய் குற்றச்சாட்டுகளை புனைந்து புகார் கொடுத்திருக்கிறார். மேலும் தனிப்பட்ட முறையில் அவரை இழிவுபடுத்தி ஊடகங்களில் பேசிதோடு, இத்தொழிற்சாலையின் அருகில் உள்ள குடிகாடு கிராம மக்களையும் தவறாக சித்தரித்தது கண்டனத்துக்குரியது.

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி குடிகாடு கிராம பொது மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் லிமிடட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் தொழில்நுட்ப குழு அமைத்து கிரிம்சன் தொழிற்சாலையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தவும், தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தி.மு.க அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com